வியாழன், 1 செப்டம்பர், 2011

மங்காத்தா-THE GAME

மங்காத்தா’வில் வரும் அஜித் குமார், 40 வயது நிரம்பிய போலிஸ் அதிகாரியாக ‘வினாயக் மாதவன்’ கேரக்டரில் வருகிறார். அந்த வயதிற்கே உரிய தொப்பை, நரைத முடி என அனாசயமாக வருகிறார். மங்காத்தா இவருக்கு 50-படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது திரைவாழ்வில் ஒரு மைல்கல். இப்பட்டிப்பட்ட படத்தில் ‘எதிர்மறையான பாத்திரம்’ ஏற்று நடித்திருக்கும் அஜித்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போடலாம்.

அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, ‘500 கோடி ரூபாய்...’ என்று சொல்லியபடியே அவர் தனது உடம்பை சிலிர்க்கும் காட்சியை உதாரணமாகச் சொல்ல்லாம்.

*ஆரம்பத்தில் தொய்வாக இருந்தாலும், அதற்குப் பிறகு வேகம் எடுக்கும் வெங்கட் பிரபுவின் விறுவிறுப்பான ‘மங்காத்தா’ திரைக்கதை

*யுவன்சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையும், பாடல் இசையும் படத்திற்கு பலம்.

*சக்தி சரவணனின் மிரட்டலான ஒளிப்பதிவு.

*விறுவிப்பான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் ஆகியோரின் நேர்த்தியான படத்தொகுப்பு.

மொத்தத்தில் ‘மங்காத்தா’ நிச்சயம் ரசிகர்களுடன் விளையாடும் படம்! அஜித் ரசிகர்களுக்கு ஆர்ப்பாட்டமான படம்!
கிங் உள்ளே
தல வெளியே        மங்காத்தா   ஓகே

THE REAL   வெங்கட் பிரபு GAME



சனி, 16 ஜூலை, 2011

தெய்வ திருமகள் - செதுக்கல்

நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி
எழுத்து - இயக்கம் - விஜய்



கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதினை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.



மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.



மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார்.

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம்,

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது,

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!
ஒருதிரைப்படம் உருவாகவில்லை      செதுக்கப்பட்டுள்ளது       NICE